சட்டவிரோத போதை பொருட்களை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எட்டு பேர், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.
எழில் செழியன் கமலதாஸ், 46, பார்த்திபன் நாராயணசாமி, 58, தீபக் மன்சந்தா, 43, உள்ளிட்ட, இவர்கள் எட்டு பேரும், புரூக்ளின் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர்.
இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக, 25 ஆண்டு வரை, சிறை தண்டனை கிடைக்கும்.