இவ்வாண்டுக்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 246 பேர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை www.donets.lk என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும்.
2019 ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு 4,900 பேர் தோற்றியிருந்ததாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.