புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து முன்னெடுக்கப்படும் பிரதான 40 கூட்டங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, லக்கலையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது.
எதிர்வரும் 22 ஆம் திகதி கட்டுகம்பொலவிலும், எதிர்வரும் 23 ஆம் திகதி களனியிலும் நடைபெறும் பிரதான கூட்டங்கள் உட்பட பல பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கான பிரசாரக் கூட்டங்கள் 40 இலும், வெவ்வேறு முக்கிய சந்திப்புக்கள் பலவற்றிலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.