பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக பார்க்கும் வகையில் முடியுமானால் நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றுக்கு வருமாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் மூலம் அதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
வாக்காளர்களின் முன்னிலையில் தமது கொள்கை மற்றும் எதிர்கால நோக்கங்கள் தொடர்பாக வேட்பாளர்கள் இருவரும் பகிரங்கமாக தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக அமையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.