கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இதுவரையான தமது கிரிக்கெட் வாழ்க்கையில் தம்மை சுற்றி வந்த 3 அணிகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் இளமை காலம் முதல் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ‛‛சச்சின் பில்லியன் டிரீம்ஸ்” என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் எர்கின்ஸ் இயக்கியுள்ளார். வரும் மே. 26 ஆம் திகதி வெளியாக உள்ளது. முன்னதாக இத்திரைப்படத்தின் ப்ரிவியூஷோவை டெல்லியில் ஆயுதப்படையினருடன் சச்சின் கண்டு ரசித்தார்.
பின்னர் பேசிய சச்சின், நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்கும் வீரர்களுடன் படம் பார்த்தை பெருமையாக நினைக்கிறேன். உண்மையான ஹீரோக்கள் என்றால் அவர்கள் தான்.
கிரிக்கெட் வீரராக ஒவ்வொரு முறையும் துடுப்பெடுத்தாடும் போது என்னை சுற்றி மூன்று அணிகள் இருப்பதை உணர்வேன். அவை தனி ஒருவனாக துடுப்பெடுத்தாட களம் இறங்கும் போது உடன் சகவீரர் இருப்பது, மற்றொருவர் எனது ஆட்டத்தை ரசிக்கும் எனது குடும்பம், மூன்றாவது எனது ரசிகர்கள் என்றார்.
இவை மூன்றுமே இதுநாள் வரை தம்மை சுற்றி வந்த அந்த 3 அணிகள் என சச்சின் உருக்கமாக பேசியுள்ளார்.