வெளிவிவகாரம் மற்றும் நிதி அமைச்சைத் தவிர கொழும்பு நகரில் அமைந்துள்ள ஏனைய சகல அரச நிறுவனங்களையும் பத்தரமுல்லவுக்கு கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாக மாநகர மற்றும் மேல் மாகாண அமைச்சு தெரிவித்துள்ளது.
பல நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரட்ன தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் பல அரச நிறுவனங்கள் பத்தரமுல்ல பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. புதிய காரியலங்கள் பலவற்றுக்காக கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

