கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ராம் இயக்கிய பேரன்பு, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய பாரம், ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூலெட் ஆகிய படங்கள் தேர்வாகி உள்ளது.
இதில் டூலெட் போட்டி பிரிவிலும் பங்கேற்கிறது. சிறந்த படத்திற்கான போட்டியில் இருக்கிறது. சிறந்த படங்களின் போட்டியில் இடம்பெற்ற முதல் தமிழ் படம் இது தான். இது தவிர இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் இந்தியாவின் சிறந்த புதுமுக இயக்குனர்கள் போட்டி பிரிவுக்கும், சர்வதேச அளவிலான அறிமுக இயக்குனர்கள் போட்டி பிரிவுக்கும் தேர்வாகி உள்ளது.
கடந்த ஆண்டு கோல்கட்டாவில் நடந்த சர்வதேசபட விழா போட்டியில் சிறந்த இந்திய படத்துக்கான விருதை இந்தப்படம் பெற்றது குறிப்பிடத்தக்து. ஒரு தம்பதிகள் தாங்கள் வாழ ஒரு வாடகை வீடு தேடி அலைவதே படத்தின் கதை. பத்திரிகையாளர் அருள் எழிலன், நாடக கலைஞர் ஆதிரா, ஆகியோர் நடித்துள்ளனர்.