கோத்தபாயவுக்கு ஆதரவாக செயற்படும் இராணுவ புலனாய்வு பிரிவு! அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கடந்த வாரம் விலக்கப்பட்டமையை அடுத்தே இந்த பிரிவுகளும் கலைக்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் நிலையில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலே நீக்கப்பட்டு, பிரிகேடியர் விஜேந்திரா குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சாலேவியின் கீழ் இயங்கிவந்த இரண்டு பிரிவுகளே கலைக்கப்பட்டுள்ளன.
நம்பத்தகுந்த தரப்புக்களின் தகவல்படி, சுரேஸ் சாலேக்கு பாதுகாப்பு தரப்பில் வெளியிடப்பட்ட நம்பிக்கையின்மையே அவரின் பதவி நீக்கத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுக்கு நெருங்கிய அதிகாரி என்பதுடன் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமே அவரை பதவி நீக்க காரணமாக அமைந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது..
இதேவேளை புதிய பணிப்பாளர் குணதிலக்க, பீல்ட் மார்ஷல், அமைச்சர் சரத் பொன்சேகாவின் நெருங்கிய அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.