Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபயவை வீட்டுக்கு விரட்டியது அமெரிக்காவே! இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குற்றச்சாட்டு

May 2, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ஏற்பட்ட நிலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கே அமெரிக்கா பயணத் தடை விதித்து வருகின்றது. கோட்டாபய ராஜபக்சவைக்கூட அமெரிக்காவே வீட்டுக்கு அனுப்பிவைத்தது என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

எதிர்க்கட்சியினரின் நோக்கம்

கோட்டாபயவை வீட்டுக்கு விரட்டியது அமெரிக்காவே! இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குற்றச்சாட்டு | Sri Lanka Political Crisis Gotabaya Rajapaksa

அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என எதிர்க்கட்சிகளே வலியுறுத்தின. ஆனால், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான  வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியினர் சபையில் இருக்கவில்லை.

இதன்மூலம் அவர்களின் நோக்கம் தெளிவாகின்றது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாட்டுக்கு அவசியம். தற்போது புதிய சில பயங்கரவாதிகள் உருவாகியுள்ளனர்.

அரசிடம் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, விடைத்தாள் திருத்தாமல் உள்ளனர். மாணவர்களுக்குக் கல்வி கற்க விடாமல் அவர்களை வீதிக்கு அழைத்து வருகின்றனர்.

இப்படியான பயங்கரவாதிகளும் உள்ளனர். இவர்கள்தான் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்க்கின்றனர். அதேவேளை, பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய படையினருக்கு அமெரிக்கா தடை விதிப்பது வழமை. தமது நண்பர் இறந்துவிட்டதால் அவர்களுக்கு (அமெரிக்கா) கவலை இருக்கும். இதனால்தான் கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கே விரட்டினர்.” – என்றார். 

Previous Post

அஜித் குமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு

Next Post

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Next Post
பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures