ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த நாள் அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
எனினும், குறித்த தினம் ஜனாதிபதியின் பிறந்த நாள் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களினால் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் சிறிய கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தேர்தலுக்கான தினத்தை கணக்கிட்டு தெரிவு செய்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.