கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலரை வடரக சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகடை சிறைச்சாலை, கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலை மற்றும் மகஸின் சிறைச்சாலை ஆகியவற்றில் தற்பொழுது கைதிகளின் எண்ணிக்கை அதன் அளவைவிட எல்லை மீறிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
வடரக சிறைச்சாலையில் புதிய கட்டிடமொன்றை அமைத்து அதில் கொழும்பு சிறைச்சாலைகளிலுள்ள 800 கைதிகளை மாற்றம் செய்வதற்கு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த கட்டிடத்தை அமைப்பதற்கு 1186 மில்லியன் ரூபா திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த நிதியை பெற்றுக் கொள்ள அமைச்சரவையின் அனுமதியை விரைவில் பெறவுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி சகோதர ஊடகமொன்று அறிவித்துள்ளது.