உங்கள் அணி 200 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டது. உங்களின் ஓப்பனிங் பெளலர்கள் 80 ரன்களுக்குள் எதிரணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டனர். ஆனாலும், உங்களால் வெற்றிபெறமுடியவில்லை என்றால் தவறு எங்கேயிருக்கிறது கோலி?
விராட் கோலி இந்திய அணிக்குத் தலைமை தாங்கி பல வெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கலாம். ஆனால், அந்த வெற்றிகளுக்குத் தன்னுடைய கேப்டன்ஸிதான் காரணம் என அவர் உரிமை கொண்டாட முடியாது என்பதை உலகுக்குச் சொல்லியிருக்கிறது கேப்டன் கோலியின் சமீபத்திய சொதப்பல்கள்.
ஒரு தலைவன் என்றால் அவனுக்கு இலக்கு என்பது இருக்க வேண்டும். இலக்கில்லாத தலைவன் தலைவனே கிடையாது. எது டார்கெட் என்று தெரிந்தால்தான் நீங்கள் டார்கெட்டை அடைவதற்கான பயணத்தில் பயணிக்க முடியும். தலைவன் என்பவன் சர்ப்ரைஸ்களைச் சந்திக்கலாம். ஆனால், சர்ப்ரைஸ்களை எப்படிச் சாமாளிக்க வேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். ஒரு பிளான் சொதப்பினால், அடுத்த பிளான், அதற்கு அடுத்த பிளான் எனத் தாவ வேண்டும். ஆனால் கோலிக்கு டார்கெட் என்னவென்றே தெரியவில்லை.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால், ஐபிஎல் சாம்பியன்ஸ் என்கிற பட்டத்தை பெங்களூரு அணிக்கு வென்றுதரவேண்டும் என்பதுதான் கோலியின் இலக்கு. ஒரு போட்டியில் தோற்கலாம், ஒரு போட்டியில் வெற்றிபெறலாம். ஆனால், அந்தப் பிராசஸில் தோல்வியில் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்துக்கொண்டு, அடுத்தடுத்த போட்டிகளில் அதைச் சரிசெய்ய வேண்டும்.
இங்கேதான் கோலி, தோனியிடமிருந்து பாடம் கற்க வேண்டும்