கேரளாவை பொறுத்தவரை விஜய்க்கு ரசிகர் கூட்டம் அதிகம் இருப்பது உண்மை தான். விஜய் படம் வெளியாகும் நாளில் வேறு எந்த மலையாள படங்களும் கூட வெளியாகாமல் தனியாக வெளியாகும் அளவிற்கு அங்கே விஜய்யின் மார்க்கெட் கொடிகட்டி பறக்கிறது
இந்த நிலையில் கேரள அமைச்சர் பி.சி.ஜார்ஜ் என்பவர் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரை விட விஜய் தான் பாப்புலரானவர். அவருக்குத்தான் அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது என கூறியுள்ளார். இது மோகன்லால், மம்முட்டி ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது
விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் தான் என்றாலும் மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் ரசிகர்களுடன் ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை குறைவு தான் என இரு தரப்பு ரசிகர்களும் சம்பந்தப்பட்ட அமைச்சரை வசைபாடி வருகிறார்கள்.