இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பெரும்பான்மை ஆதரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைத்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கும், இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும், நாடு தழுவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பேச்சுவார்த்தையின் போது அச்சங்கம் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கும், அரச போக்குவரத்து சேவையினரது பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குவதற்கான முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை முழுமையாக செயற்படுத்துவதாகவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது வாக்களித்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.