கெக்கிராவ பிரதேசசபை கட்டடத் தொகுதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சோமகமகேவினால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கெக்கிராவ பிரதேசசபை தலைவர் சம்பத் ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் கெக்கிராவ பிரதேசசபை தலைவரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த குற்றச்சாட்டை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சோமகமகே முற்றாக மறுத்துள்ளார்.