Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூடாரங்களில் வாழ்ந்து பானிப்பூரி விற்றவரின் முதலாவது ஐபிஎல் சதம்

May 1, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
கூடாரங்களில் வாழ்ந்து பானிப்பூரி விற்றவரின் முதலாவது ஐபிஎல் சதம்

கூடாரங்களில் வாழ்ந்து பானிப்பூரி விற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2023 ஐபிஎல் தொடரில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளதை கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணிக்காக 21 வயது  ஜெய்ஸ்வால்  62 பந்துகளில் 124 ஓட்டங்களை பெற்றார்.

ஜெய்ஸ்வால் தான் பிறந்த உத்தரபிரதேசத்திலிருந்து வெளியேறி மும்பாயில் குடியேறியவர் – அந்த மும்பாயில் அவர் தனது முதலாவது ஐபிஎல் சதத்தை பெற்றுள்ளார்.

11 வயதில் ஜெய்ஸ்வால் தனது குடும்பத்தவர்களுடன் மும்பாய்க்கு குடிபெயர்ந்தார்.

நான்மாட்டுபண்ணையில் உறங்குவேன் பின்னர் உறவினர் வீட்டில் தங்கினேன் அவர் என்னை வேறு இடம்பார்க்கசொன்னார் 2020 இல் ஜெய்ஸ்வால் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தார்.

மும்பாய் மைதானத்தில் நான் கூடாரமொன்றில் தங்கியிருந்தேன்,பகலில் நான் விளையாடுவேன் உணவிற்கு பணம் சேர்ப்பதற்காக  நான் இரவில் பானிப்பூரி விற்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கழகங்களின் கிரிக்கெட் ஓட்டங்களை பதிவது பந்தை எடுத்துகொடுப்பது போன்றவற்றை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கழகத்திற்கானகட்டணத்தை செலுத்தினேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது முதல் சதத்திற்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன எவ்வாறான சிறந்த கதை எவ்வாறான சிறந்த திறமை ஜெய்ஸ்வால் ஒரு எதிர்கால சூப்பர்ஸ்டார் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டொம்மூடி தெரிவித்துள்ளார்.

அவரிடம் மிகச்சிறந்த திறமையுள்ளது உள்ளுர் போட்டிகளில் அவர் மிகச்சிறப்பாக விளையாடினார் அந்த திறமையை ஐபிஎல்லில் தொடர்கின்றார் என இது இந்திய அணிக்கும் ராஜஸ்தான் ரோயலிற்கும் சிறந்த விடயம் என ரோகித்சர்மா தெரிவித்துள்ளார்.

Previous Post

சமையல் எரிவாயுவின் விலையும் விரைவில் குறையும் என அறிவிப்பு!

Next Post

இலங்கையை ஒத்த நிலையே எமக்கும் ஏற்படும் | இம்ரான்கான் எச்சரிக்கை

Next Post
பாக்கிஸ்தானில் இலங்கை போன்று மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை – இம்ரான்கான்

இலங்கையை ஒத்த நிலையே எமக்கும் ஏற்படும் | இம்ரான்கான் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures