குழந்தையின் படுக்கையறையில் ஆயுதங்கள் மீட்பு: மூவர் கைது

குழந்தையின் படுக்கையறையில் ஆயுதங்கள் மீட்பு: மூவர் கைது

போதை மருந்து கடத்தல் விசாரணைகளின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை கல்கரியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மூன்று சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கரி மெமோரியல் டிரைவ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குழந்தைகள் படுக்கையறையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து மற்றுமொருவர் கைது செய்யப்பட்டார்.

இத குறித்து தகவல் வெளியிட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், ‘ குறித்த நபரின் வீட்டில் குழந்தைகள் படுக்கையறையில், வெடிபொருட்கள் மற்றும் 22 கலிபர் துப்பாக்கிகள் மீட்கப்பட்டது.

அத்துடன் உரிமத் தகட்டுடனான 9 அஅ கைத்துப்பாக்கி, ஒருதொகைப் பணம், கொகெயின் மற்றும் மரிஜூவானா போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ddddd

384 total views, 384 views today

– See more at: http://www.canadamirror.com/canada/63774.html#sthash.rIC8wp31.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News