Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குற்றவாளிகலுள்ள ஆட்சியின் கீழ் இருப்பதை நினைத்து மக்கள் வெட்கப்பட வேண்டும் | அநுரகுமார

December 18, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள் தற்போது புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் வருவதற்கு முயற்சிக்கின்றனர். காட்டுச்சட்டமே நாட்டில் உள்ளது.

குற்றவாளிகளே ஆட்சியில் உள்ளனர். இவ்வாறான ஆட்சியாளர்களின் கீழ் இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் மாநாடு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள் தற்போது என்ன செய்கிறார்கள். புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் வருவதற்கு முயற்சிக்கின்றனர்.

கடந்த வருடம் மே, ஜூன் காலப்பகுதியில் விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் குறிப்பாக கொழும்பில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ எங்கு சென்று மறைந்தார்? திருகோணமலை முகாமில் மறைந்திருந்தார்.

கொழும்பிலிருந்த பஷில் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்தார். கொழும்பிலிருந்து நாமல் எங்கு சென்று மறைந்தார். தந்தையுடன் முகாமிற்கு சென்றார். கோட்டாபய எங்கு இருந்தார். மாலைத்தீவில் இருந்தார். பின்னர் சிங்கபூருக்கு சென்றார்.

இவை அனைத்தும் நினைவிருக்கிறதா? ஆனால் தற்போது மாநாடு ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் தலைவராக மீண்டும் மஹிந்தவை தெரிவு செய்திருக்கிறார்கள்.

அவர்கள் மீண்டும் வருகிறார்கள். ஏன் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவா? மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுப்பார்களா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ரணில் விக்கிரமசிங்கவின் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இரண்டு தரப்பினரும் முன்னர் ஒருவருக்கு ஒருவர் போரிடும் எதிரிகளாக தெரிந்தார்கள். தற்போது அவர்கள் இருவரும் ஒரே அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.

நீதிமன்றத்தில் அபராதம் விதித்துள்ளனர். மஹிந்த கோட்டாபய பஷில் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட பலர் குற்றவாளிகள். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூட குற்றவாளி. காட்டுச் சட்டமே நாட்டில் உள்ளது. குற்றவாளிகளே ஆட்சியில் உள்ளனர்.

நிதியமைச்சரின் உத்தரவுக்கு அமைய செயற்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகிறார். உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான ஆட்சியாளர்களின் இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும் என்றார்.

Previous Post

“என் கனவுப் படம்…” : வாய் திறந்த ஜி.வி.!

Next Post

பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின்போது 83 பேர் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின்போது 83 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures