பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ரயன் வென்றோய் உள்ளிட்ட 5 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், இன்று அதிகாலை 5.25 அளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 226 ரக விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த நிலையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவர்களை பொறுப்பேற்றனர்
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து அவர்களிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

