குருநாகல் வைத்தியசாலையில் இதுவரை சுமார் 16 பெண்கள் அவர் மீது முறைப்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபிக்கு எதிராக பல பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
குருணாகல், வாரியபொல, கலீவெல, தம்புள்ள, மவதகம, மெல்சிரிபுரா பகுதிகளை சேர்ந்தவர்களே முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
முறையற்ற விதத்தில் சிங்கள பெண்களிற்கு கருத்தடை சிகிச்சை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.