ஒருவர் அமெரிக்க குடியுரிமையை விட்டு வெளியேறிய பின்னர் அவரது பெயர், கூட்டாட்சி பதிவேட்டில் இடம்பெறுவதற்கு பல மாதங்கள் ஆகுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதுவராலயத்தின் செய்தி தொடர்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒருவர், தனது குடியுரிமையை விட்டு வெளியேறியதும், அவர் அமெரிக்க பெடரல் பதிவேட்டில் தோன்றுவதற்கு பல மாதங்கள் ஆகும்.
மேலும் அமெரிக்க சட்டத்தின் பிரகாரம், தனிப்பட்ட ஒருவரின் கடவுச்சீட்டு அல்லது குடியுரிமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.