கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் மூன்றுக்குமான இணைப்புக் குழுத் தலைவர் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் குறித்து கண்டறிந்து அவற்றை விரைவுபடுத்துவதற்கே இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பதவி வழங்கப்பட்டதன் பின்னர் முதற்கட்ட நடவடிக்கையாக திருகோணமலை மாவட்ட இணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி திருகோணமலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்துக்கான இணைப்புக் குழுவின் தலைவர்களாக, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் எம்.ஏ.எம். மஹ்ரூப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.