காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்புளூவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென் மாணாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காலி, கராப்பிட்டி, பலப்பிட்டி, எல்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் இன்புளுவன்சா நோய் தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்நோயை தடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளமையை இனங்காணும் பொருட்டு மக்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று, தங்களை பரிசோதனை செய்துக்கொள்வது சிறந்ததெனவும் ஜீ.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.