தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியின் தர்பார் படம் மும்பையில் தொடங்கப்பட்டபோது நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனும் மும்பைக்கு விசிட் அடித்திருந்தார்.
அப்போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை அவர் வெளியிட, ரஜினியின் அடுத்த படத்தை விக்னேஷ்சிவன் இயக்குகிறார் என்று பெரிய அளவில் வதந்திகள் பரவின. இந்தநிலையில், அஜ்மீர் தர்காவிற்கு சென்றபோது எடுத்த ஒரு போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, இந்த இடத்தில் இருக்கும்போது பாசிட்டீவ் உணர்வுகள் கிடைத்து மனசு நிம்மதியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு போட்டோவில் தனது அம்மா, சகோதரி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் எடுத்த போட்டோவையும் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், தமிழ் புத்தாண்டு, விஷூ கொண்டாட்டம், காதல், குடும்பம் என குறிப்பிட்டிருக்கிறார்.