முதலில் பேட் செய்து தட்டுத் தடுமாறி ரன்கள் சேர்த்துவிட்டு பின்னர் பவுலர்களை வைத்து, ‘ஏரியாவுக்கு வாய்யா, ஏரியாவுக்கு வாயா’ என உக்கிரமாக வம்பிழுப்பதுதான் இந்த ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் ஸ்டைலாக இருந்தது. ‘பேசாம பதின்னொன்னும் பவுலராகிட்டா இன்னும் சிறப்பா இருக்கும்ல’ என்றெல்லாம் கமென்ட் கிளம்பவும் சன்ரைஸர்ஸ் பேட்ஸ்மேன்களுக்கும் கோபம் வந்துவிட்டது போல. ஆனால், பாவம் தப்பான அணியை அடித்துத் துவைத்துவிட்டார்கள். #DDvSRH
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ‘உங்களை பேட் பண்ண வச்சா வழக்கம்போல ஆட்டம் காட்டுவீங்க, நாங்களே இறங்குறோம்’ என பேட்டை பிருத்வி ஷா, ஜேசன் ராய் கையில் கொடுத்தனுப்பிவிட்டார். ஆடிய அத்தனை போட்டிகளிலும் அதிரடி காட்டிய ஷா நேற்று கொஞ்சம் தடுமாறித்தான் போனார். முதல் மூன்று ஓவர்கள் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளித்து ஆடுகிறார்கள் எனத் தெரிந்ததும் ஷகிப்பை கொண்டுவந்தார் வில்லியம்சன். கேப்டன் சீப்பாக போட்ட ப்ளானை ஷார்ட் பால் போட்டு முடித்து வைத்தார் ஷகிப். தவான் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஷா. ‘போறானே ப்ருத்வி ஷா பொசுக்குனு அவுட்டாகித்தான்’ என ஹஸ்கி வாய்ஸில் பாடியபடி அடுத்த பாலிலேயே ராயும் நடையைக் கட்டினார்.