Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்விச் சுற்றுலாவின் போது படகு கவிழ்ந்ததில் இரு ஆசிரியர்களும் 14 மாணவர்களும் பலி | இந்தியாவில் சம்பவம்

January 20, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
கல்விச் சுற்றுலாவின் போது படகு கவிழ்ந்ததில் இரு ஆசிரியர்களும் 14 மாணவர்களும் பலி | இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின், குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களென மொத்தம் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் வியாழக்கிழமை (18) மதியம் அங்குள்ள ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஹர்னி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 

“இதுவரை, 14 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்ட ஒரு மாணவர், எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Previous Post

ஏடன் வளைகுடாவில் 9 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

Next Post

“பரோட்டா” இல்லையெனக் கூறிய ஹோட்டல் உரிமையாளர்களான தம்பதியினர் மீது தாக்குதல்

Next Post
“பரோட்டா” இல்லையெனக் கூறிய ஹோட்டல் உரிமையாளர்களான தம்பதியினர் மீது தாக்குதல்

“பரோட்டா” இல்லையெனக் கூறிய ஹோட்டல் உரிமையாளர்களான தம்பதியினர் மீது தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures