இலங்கையில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் அதற்கான பாடத் தொகுதிகள் தயாரிப்பில் இடம்பெற்ற நிதி விரயம் தொடர்பாக, கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தக் கட்சியின் உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கவிரத்ன (Rohini Kumari Wijeratne-Kavirathna), இந்தச் சீர்திருத்தச் செயல்முறை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாடப்புத்தகங்கள் அச்சிடுதல், விநியோகம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக செலவிடப்பட்ட கோடிக்கணக்கான வரிப்பணம் தற்போது வீணாகியுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் : அரசு எடுத்துள்ள நடவடிக்கை
கல்விச் சீர்திருத்தங்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள், பெற்றோர் அல்லது நாடாளுமன்றத்துடன் எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருந்தும், தம்மை இந்தச் செயற்பாட்டில் இணைத்துக்கொள்ளவில்லை.
சீர்திருத்தங்களைத் தயாரிக்கும் தேசிய கல்வி நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் தகைமைகள் குறித்து ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். பொருத்தமற்ற நபர்கள் இப்பதவிகளில் இருப்பதால் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
