Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கலம்போ எவ்.சி. , ஜாவா லேன் இலகுவான வெற்றிகள்

July 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கலம்போ எவ்.சி. , ஜாவா லேன் இலகுவான வெற்றிகள்

சிட்டி புட்போல் லீக்கினால் நடத்தப்பட்டுவரும் சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்தின் 3 ஆம் கட்டப் போட்டிகளில் கலம்போ எவ்.சி. , ஜாவா லேன் ஆகிய இரண்டு அணிகளும் மிக இலகுவான வெற்றிகளை ஈட்டின. 

சிட்டி லீக் மைதானத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் மாளிகாவத்தை யூத் அணியை எதிர்த்தாடிய கலம்போ எவ்.சி. 3 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

மிகவும் இறுக்கமாக நடைபெற்ற ஆட்டத்தின் முதலாவது பகுதியில் 15ஆவது நிமிடத்தில் எம். சவ்ரான் சத்தார் கோல் போட்டு கலம்போ எவ்.சி.யை முன்னிலையில் இட்டார்.

எனினும் போட்டியின் 34ஆவது நிமிடத்தில் மாளிகாவத்தை யூத்துக்கு கிடைத்த பெனல்டியை எம். அஸாம் கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் 1 – 1 என சமநிலையில் இருந்தன.

இடைவேளைக்குப் பின்னர் ஆக்ரோஷமாக விளையாடிய கலம்போ எவ்.சி. சார்பாக  61ஆவது நிமிடத்தில் எம். ஆக்கிப் தனி முயற்சி எடுத்துக்கொண்டு அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் கோல் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முயற்சித்த கலம்போ எவ்.சி. கடைசி நிமிடத்தில் நிரான் கனிஷ்க மூலம் 3ஆவது கோலைப் போட்டு இலகுவாக வெற்றிபெற்றது.

ஜாவா லேனுக்கு 4 – 2 வெற்றி

இதே மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை (02)   நடைபெற்ற மற்றொரு போட்டியில் மொரகஸ்முல்ல அணியை 4 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் ஜாவா லேன் இலகுவாக வெற்றிகொண்டது.

ஐ. மொஹமத் சப்ரான் மிகத் திறமையாக விளையாடி 2 கோல்களைப் போட்டு ஜாவா லேன் கழகம் வெற்றிபெற உதவினார்.

போட்டி ஆரம்பித்து 4ஆவது நிமிடத்தில் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேன் அணியை மொஹமத் சப்ரான் முன்னிலையில் இட்டார்.

இந் நிலையலிருந்து இரண்டு அணிகளும் ஒன்றொக்கொன்று விட்டுக்கொடுக்காமல் விளையாடின.

போட்டியின் 38 ஆவது நிமிடத்தில்  மொரகஸ்முல்ல   சார்பாக  டிலான் மதுஷன்க பந்தை தலையால் முட்டி கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையில் இருந்தன.

இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்ததும் சப்ரான் 2ஆவது கோலைப் போட்டு ஜாவா  லேன் அணியை மீண்டும்  முன்னிலையில் இட்டார்.

12 நிமிடங்கள் கழித்து எம். எவ். ரிப்கான் மிக சாமர்த்தியமாக செயற்பட்டு ஜாவா லேனின் 3ஆவது கோலைப் போட்டார்.

76ஆவது நிமிடத்தில் மதுரங்க சில்வா மேலும் ஒரு கோல் போட ஜாவா லேன் 4 – 1 என முன்னிலை அடைந்தது.

எனினும் 2 நிமிடங்கள் கழித்து மொரகஸ்முல்ல கழகத்திற்கு கிடைத்த ப்றீ கிக்கை மிக பலமாக உதைத்த என். தனஞ்சய அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

இப் போட்டியில் இரண்டு அணிகளும் முரட்டுத்தனமாக விளையாடியதால் இரண்டு அணிகளிலும் 5 வீரர்கள் மஞ்சள் அட்டைக்கு இலக்காகினர்.

Previous Post

தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?

Next Post

இலங்கையின் தொடர் வெற்றிகளுக்கு கூட்டு முயற்சியே காரணம் – மஹீஷ் தீக்ஷன

Next Post
இலங்கையின் தொடர் வெற்றிகளுக்கு கூட்டு முயற்சியே காரணம் – மஹீஷ் தீக்ஷன

இலங்கையின் தொடர் வெற்றிகளுக்கு கூட்டு முயற்சியே காரணம் - மஹீஷ் தீக்ஷன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures