கனேடிய தேசிய அவையில் அங்கத்தவராக இருக்கும் இருவர் தொடர்பில் – புலம்பெயர்ந்த தமிழரும் ,தாயகத்தமிழரும் அதிருப்தி அடைந்துள்ளனர் .
புளொட் அமைப்பை சார்ந்த ஒருவரும் ,ரெலோ அமைப்பைச்சார்ந்த ஒருவரும் ஈழவிடுதலைப்போராட்டத்தின் எதிர் சக்திகளாக இருந்து தற்போது தாமும் புலி உறுப்பினர்கள் போல் புலிகள் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட கனேடிய தேசிய அவையில் அங்கம் வகித்து உள்ளனர் .
இவர்கள் மாறுபட்ட அரசியல் கொள்கையுடன் இருந்தவர்கள். இவர்களால் தமிழர்களின் தனி உரிமை தொடர்பில் எவ்வாறான ஒன்று பட்ட முடிவையோ அல்லது புலிகளின் கொள்கைகளையோ ஆதரித்து சாதாரணமாக தமிழர்களின் ஒருமைப்பட்ட நோக்கத்துடன் பயணிக்க முடியும்? முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட இவர்களை இந்த அமைப்பில் உள்வாங்கி இருப்பது தமிழ் மக்கள் மத்தியிலும் தேசிய கொள்கை ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் விசனத்தையும் கேள்வியையும் உருவாக்கியுள்ளது .
முன்னாள் புளொட் உறுப்பினரும் அவர்களின் செய்தி வாசிப்பாளருமான தேவா . தனிநபர் பயங்கரவாதம் என தலைவரை வருணித்த செய்தியை கூட இவர் வாசித்தவர். மோகன் இராமகிருஸ்ணன் ரெலோ உறுப்பினர் , ரொனால்ட் ஜெரட்ணம் புளொட் முக்கிய உறுப்பினர். இவர்கள் அனைவருமே இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட தமது தலைமையை ஆதரித்தவர்கள்.
இவர்களை இணைத்து எப்படி நாம் தேசிய கொள்கைகளை வெளிப்படுத்தமுடியும் ? இவர்கள் அமைப்புக்குள் நுழைந்ததன் நோக்கம் என்ன ? சதி நடவடிக்கைக்கா எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் .

