Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவிற்கு தஞ்சம் கோரி வந்த அகதிகள் அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

February 12, 2017
in News
0
கனடாவிற்கு தஞ்சம் கோரி வந்த அகதிகள் அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

கனடாவிற்கு தஞ்சம் கோரி வந்த அகதிகள் அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

சோமாலிய நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் கனடாவிற்குள் நுழைய முயன்ற போது அமெரிக்க எல்லை அதிகாரிகளிடம் அகப்பட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் மூவரும் மனிரோபா எமசென் பகுதிக்கு அருகாமையில் வயல் வெளி ஒன்றின் ஊடாக கனடாவிற்குள் நுழைய முயன்ற சமயம் இச்சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் இதே வழியால் 22 அகதிகள் நடந்து வந்து மனிரோபாவை அடைந்துள்ளனர். அதில் ஒரு நபரை அவசர சேவை பிரிவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த போது மிக கடுமையான குளிராக இருந்ததாக எல்லை பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் எல்லையை கடக்க முயன்ற போது இவருடன் சேர்ந்த மற்றவரகள் உள்ளூர் எரிவாயு நிலையம் ஒன்றிற்குள் காத்திருந்துள்ளனர்.

எல்லையை கடக்கும் வரை இவர்கள் பொறுத்திருந்ததாக கூறப்படுகின்றது. பிடிபட்டவர் நடுங்கியவாறு காணப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இவர்கள் மினியாபொலிசை சேர்ந்தவர்கள். கனடாவிற்குள் செல்லும் நோக்கத்துடன் புறப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இவர்களை சிறையில் அடைக்க வேண்டாம் என இவர்களை காப்பாற்றியவர் ஷெரிப்பிடம் கேட்டு கொண்டதாக கூறப்பட்டது.

நூற்று கணக்கான அகதி கோரிக்கையாளர்கள் இமெர்சன் எல்லைக்கு ஊடாக வயல் வெளிகளில் நடந்து கனடாவிற்குள் வந்ததாக ஜனவரி மாதம் முதல் அறிக்கை விட்டிருந்ததாக அறியப்படுகின்றது.

இவர்களில் கானாவை சேர்ந்த இரு அகதிகள் தோலுறைவு நோயினால் பாதிக்கப்பட்டு வினிபெக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இப்பிரச்சனை பொது மக்கள் கவனத்தை ஈர்த்தது.

கிறிஸ்மஸ் முதல் தினத்தில் கனடா- அமெரிக்கா எல்லைக்கு அருகில் நெடுஞ்சாலை 75ல் இச்சம்பவம் இடம்பெற்றது. கடுமையாக பாதிக்கப்பட்ட அகதிகள் கைவிரல்கள் மற்றும் கால்விரல்களை இழந்தனர்.

குறித்த நபர்களின் கதை பகிரங்கமானதை தொடர்ந்து பெண்மணி ஒருவர் மற்றும் இரண்டு வயது பிள்ளை உட்பட டசின் கணக்கான அகதி கோரிக்கையாளர்கள் மனிரோபா எல்லையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்போக்கு சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததால் வியாழக்கிழமை உள்ஊர் நகர அதிகாரிகள், ஆர்சிஎம்பி மற்றும் எல்லை பாதுகாவலர்களிற்கிடையில் இமெர்சனில் ஒரு அவசர கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

Tags: Featured
Previous Post

கொழுந்துவிட்டு எரியும் பாரிஸ்: கலவரத்தை கட்டுப்படுத்த திணறும் பொலிஸ்!

Next Post

7 கிராமி விருதுகள் வென்ற பாடகர் Al Jarreau மரணம்

Next Post
7 கிராமி விருதுகள் வென்ற பாடகர் Al Jarreau மரணம்

7 கிராமி விருதுகள் வென்ற பாடகர் Al Jarreau மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures