தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரான் தொடர்பில் நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டிருக்கும் காரணங்கள் தொடர்பில் விளக்கமளிக்க கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு எதிர்வரும் 19ம் திகதி நீதிமன்றத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா த சில்வாவினால் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கஞ்சிப்பான இம்ரான் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி டிரன்த வளளியத்த அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்குரியவை என தெரிவித்ததை அடுத்தே அவை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.