தமிழர் தலைநகரான திருகோணமலையின், உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வயோதிபர் திருகோணமலை, கன்னியா, கிளிகுஞ்சுமலை பகுதியை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவருகிறது.
குறித்த நபர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையிலேயே அவர் வசமாக சிக்கியுள்ளார்.
எனினும் கைது செய்யப்பட்ட முதியவர், தான் தொழிலின்றி இருப்பதால் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், இனி இந்த தொழிலில் ஈடுபட போவதில்லை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், கைது செய்யப்பட்ட வயோதிபரை எதிர்வரும் ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உப்புவெளி பொலிஸார் கட்டளையிட்டுள்ளனர்.
மேலும், குறித்த வயோதிபரின் வீட்டிலிருந்து 4500 மில்லிலீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

