Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கங்கையில் நீராடிய பலனைத் தரும் தீர்த்தங்கள்

September 2, 2021
in News, ஆன்மீகம்
0
கங்கையில் நீராடிய பலனைத் தரும் தீர்த்தங்கள்

கங்கையில் நீராடிய பலனைத் தரும் பல புண்ணியத் தீர்த்தங்கள் நம்முடைய தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. அந்த புண்ணிய நதி களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

காசி நகரம், சிவபெருமானே உருவாக்கியது என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த நகரைச் சுற்றிலும் ஓடும் கங்கை நதியானது, புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதில்நீராடினால் எப்பேர்ப்பட்ட பாவங்களும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் அனைவராலும் கங்கை நதி பாயும் இடத்திற்குச் சென்று நீராட முடியுமா என்பது கேள்விக்குறிதான். அந்த வகையில் கங்கையில் நீராடிய பலனைத் தரும் பல புண்ணியத் தீர்த்தங்கள் நம்முடைய தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. அந்த புண்ணிய நதி களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

* மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்தின் முன்பாக உள்ள காவிரியின் துலா கட்டத்தில், ஐப்பசி மாதம் முழுவதும் நீராடினால், கங்கையில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். கார்த்திகை முதல் நாள் நீராடினாலும் அந்தப் பலனைப் பெறலாம்.

* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவிசநல்லூர் என்ற ஊர். இங்கு ஸ்ரீதரஐயாவாள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்திற்குள் தீர்த்தக்கிணறு ஒன்று உள்ளது. இதில் கார்த்திகை மாத அமாவாசை நாளில் கங்கை நீர் பொங்கி வெளியேறும். அப்போது நீராடினால் புண்ணிய பலன் கிடைக்கும்.

* ஸ்ரீவாஞ்சியத்தில் குப்த கங்கை என்ற திருக் குளம் உள்ளது. இந்த திருக்குளத்திலும் கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.

* முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் ஒன்று திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில். இங்குள்ள கடலில் தினமும் நண்பகல் வேளையில் கங்கை வந்து நீராடுவதாக ஐதீகம். இதனால் அந்த நேரத்தில் கோவில் அர்ச்சகர்கள், கடலுக்கு தீபாராதனை காட்டுவார்கள். அப்போது கடலில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும்.

* சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், தஞ்சை பெரியகோவில் ஆகியவற்றில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தங்களில் நீராடினாலும், கங்கையில் நீராடிய புண்ணியம் வந்தடையும்.

* திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில், சனி பகவான் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு பெற்றது. இங்குள்ள கங்கா தீர்த்த குளத்தில் நீராடினால், கங்கையில் மூழ்கி எழுந்த பலன் உண்டாகும்.

* திருவாரூர் அருகே உள்ள குருவிராமேஸ்வரம் என்ற இடத்தில் முக்கூடல் தீர்த்தம் என்னும் திருவேணி சங்கமத்திற்கு சமமான தீர்த்தம் உள்ளது. இங்கு நீராடினாலும் கங்கையில் நீராடிய சிறப்பைப் பெற முடியும்.

* சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சவும்யநாராயணப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் மகா கிணறு ஒன்று இருக்கிறது. இங்கு ஐப்பசி அமாவாசை நாளில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

* திருப்பூர் பஸ்நிலையம் அருகே உள்ளது விஸ்வேஸ்வரர் கோவில். இங்குள்ள தீர்த்தக் கிணறு, கங்கை தேவியே நீராடிய புனிதம் வாய்ந்தது என்று தல வரலாறு சொல்கிறது. எனவே அந்த தீர்த்தத்தில் நாமும் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் வந்தடையும்.

* திருக்கடையூர் வீரட்டானம் திருத்தலம், எமனிடம் இருந்து மார்க்கண்டேயனை சிவபெருமான் காப்பாற்றிய சிறப்புமிக்கது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடையூர் மயானம் என்ற இடம் உள்ளது. இங்கு காசி தீர்த்தம் ஒன்று இருக்கிறது. அது மார்க்கண்டேயருக்காக கங்கை நதி, தீர்த்தமாக உருவெடுத்த இடமாகும். எனவே இங்கு நீராடினாலும் கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.

* மதுரை அருகே உள்ள அழகர் கோவில் மிகவும் சிறப்புக்குரியது. அதற்கு மேல் உள்ள மலையில் முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. எங்கிருந்து வருகிறது என்றே கண்டறியப்படாத அந்த தீர்த்தத்தில் நீராடினாலும், கங்கையில் நீராடிய புண்ணியத்தை அடையலாம்.

* புனித நீராடலுக்கு பெயர் பெற்ற திருத்தலங்களில் ஒன்று, ராமேஸ்வரம். இங்கு கோடி தீர்த்தம் உள்ளது. ராமபிரான், இங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்தபோது, அதனை நீராட்ட நன்னீர் தேவைப்பட்டது. ஆகையால், அவர் தன்னிடம் இருந்த அம்பை, பூமியில் அழுத்தினார். உடனே, அதில் இருந்து கங்கை பீறிட்டு வெளிவந்தது. அதுவே தற்போது கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கப்பெறும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகுவலியை தவிர்ப்பது எப்படி?

Next Post

தஞ்சையின் பெயர் சொல்லும் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில்

Next Post
தஞ்சையின் பெயர் சொல்லும் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில்

தஞ்சையின் பெயர் சொல்லும் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures