ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த விமானப்படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி, தனது குழந்தைகளின் போசணை மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தியாக்க உதவியளிக்குமாறு “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” நிகழ்ச்சித்திட்டத்தில் விடுத்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் குழந்தைகளின் பராமரிப்பிற்காக தலா ஐந்து இலட்ச ரூபா வீதம் நான்கு குழந்தைகளுக்கும் 20 இலட்ச ரூபா நிதியுதவியினை இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.