ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் மே தினத்தன்று அறிவிப்புச் செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பிப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி பாரிய கூட்டணியுடன் மக்கள் முன்வரவுள்ளது. இதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது வேட்பாளர் ஐ.தே.கட்சியிலிருந்துதான் வரும். பொது அபேட்சகராக அவர் களமிறங்கவுள்ளார் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.