நாம் எதிர்பார்த்த மாற்றம் என்ன என்பதை ஏப்றல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் விளக்கத்துடன் ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணிலுக்கு எதிரான மாற்றுக் கருத்துள்ள உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட புதிய பொறுப்புக்கள் மாற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
மறுசீரமைப்பு குழுவினால் முன்வைக்கப்பட்ட பதவிகள் அனைத்தும் நிறைவேற்றுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டுமானால், மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட வேண்டும். அப்போதே, வாக்கெடுப்பொன்றைக் கோர முடியும். இதுவே கட்சி யாப்பியல் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமாகும்.
ஜோசப் மைக்கல் பெரேரா கட்சியின் மத்திய செயற்குழு பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அது அவரது கருத்து. என்னைப் பொருத்த வரையில் பொறுப்பிலிருந்து விலகி எதனையும் சாதிக்க முடியாது. உள்ளே இருந்துதான் போராட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.