எமது நாட்டில் சமயக் கல்வியை கற்பிக்கும் அனைத்து கட்டிடங்களினதும் குறைபாடுகளை 2025 ஆம் ஆண்டாகும் பொழுது நிவர்த்தி செய்வதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இரத்மலான பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எழுந்து நிற்கும் ஒருவருக்கு அடிக்க முடியுமான பெரிய அடியை அடிப்பது அரசியல் சமூகத்தின் பண்பாக மாறியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகளில் திறைமையானவர்களுக்கு சரியான இடம் வழங்கப்படுகின்றதா என்பதில் விமர்சனம் காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.