Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிவாயு கப்பலுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன | தொடர்ந்தும் மக்கள் வரிசையில்!

March 18, 2022
in News, Sri Lanka News
0
எரிவாயு கப்பலுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன | தொடர்ந்தும் மக்கள் வரிசையில்!

சமையல் எரிவாயு கப்பலுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் , அதற்கமைய நேற்று முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை இடை நிறுத்துவதாக லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையிலேயே எரிவாயு கப்பலுக்கு செலுத்துவதற்கான டொலர் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நேற்று முதல் மீண்டும் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் , நாட்டின் பல பிரதேசங்களிலும் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இதே வேளை நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் , எரிபொருள் விநியோகம் வழமைப் போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எரிபொருளுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணம் விநியோகத்தில் காணப்படும் பலவீனமேயாகும்.

விரைவாக விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

டீசல் கப்பலொன்றுக்குமான 52 மில்லியன் டொலர் கொடுப்பனவும் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கான தாமத கட்டணத்தை செலுத்த தேவையில்லை.

இந்த கப்பலிலிருந்து முத்துராஜவெல களஞ்சியசாலைக்கு எரிபொருள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இங்கு குழாய் மூலம் எரிபொருளை விநியோகிக்க முடியாது. பவுசர்கள் ஊடாகவே விநியோகிக்க முடியும். எனவே தான் விநியோகத்தில் சற்று கால தாமதம் ஏற்பட்டது என்றார்.

இதே வேளை நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலுக்கான கொடுப்பனவை செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு வருகின்றன.

குறித்த கப்பலுக்கு செலுத்த வேண்டியுள்ள 42 மில்லியன் டொலர்கள் கிடைக்கப் பெறாமையின் காரணமாகவே இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

22 000 மெட்ரிக் தொன் டீசல் , 22 000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் என்பவற்றுடன் நாட்டுக்கு வருகை தந்த கப்பலொன்று கடந்த 5 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலுக்கான கொடுப்பனவை செலுத்தாமையின் காரணமாக அதில் காணப்படும் எரிபொருளை தரையிறக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

நாட்டில் தற்போது நாளாந்தம் எரிபொருளுக்கான கேள்வி 9000 மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய வலுசக்தி அமைச்சின் செயலாளர் , இதன் காரணமாகவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நாளாந்தம் 7000 மெட்ரிக் தொன் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அதிகாலை முதல் இரவு வேளை வரை பெற்றோல் மற்றும் டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தொடர்ந்தும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி?

Next Post

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் பெற்றோல் 130, டீசல் 126 ரூபாவாக இருந்திருக்கும்

Next Post
கோட்டாபய கூறுவது முற்றிலும் பொய் | அம்பலப்படுத்திய சம்பிக்க

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் பெற்றோல் 130, டீசல் 126 ரூபாவாக இருந்திருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures