Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருளின் தரம் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை | நளின் சந்திரசிறி

April 10, 2022
in News, Sri Lanka News
0
டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு  எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல்

People stand in a queue to buy diesel fuel oil at a Ceylon Petroleum Corporation fuel station in Colombo on March 1, 2022. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

எரிபொருளின் தரம் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை. தரம் தொடர்பில் பிரச்சினை இருந்தால் முறையிடலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஆய்வு பிரிவு முகாமையாளர் நளின் சந்திரசிறி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எரிபொருள் இறக்குமதி செய்யும்போதே எமது தரம் தொடர்பில் நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்புகின்றோம்.

அதேபோன்று எரிபொருள் கப்பலுக்கு ஏற்றும்போது அதுதொடர்பான தரம் பரிசோதிக்கப்பட்டு எமக்கு அறிக்கை வழங்குவார்கள். அதன் பின்னர் கப்பலில் வரும்போது அதற்கு குறித்த கம்பனி பொறுப்பேற்கின்றது.

அதேபோன்று எரிபொருள் கப்பல் இங்குவந்து நங்கூரமிட முன்னர் அதில் இருக்கும் எரிபொருளின் தரம் தொடர்பில் மாதிரி பெற்றுக்கொள்ளப்படுகின்றது. அதன் பின்னரே எரிபொருளை இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மேலும் எரிபொருள் களஞ்சியப்படுத்துவதற்கு முன்னர் மீண்டும் தரம் தொடர்பாக சிபெட்கோ நிறுவனமும் எமது ஆய்வு பிரிவும் பரிசோதனை செய்தே களஞ்சியப்படுத்துகின்றோம். அதேபோன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் மீண்டும் அதன் தரம் தொடர்பில் ஆய்வு செய்தே வெளியில் அனுப்புகின்றோம்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் தொகை 4தடவைகள் பகுப்பாய்வுக்கு உட்பட்டு அதன் தரம் உறுதிசெய்யப்பட்ட பின்னரே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

அவ்வாறு இருந்தும் எரிபொருள் தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அதிகாரசபை எமது கூட்டுத்தாபனத்துக்கு வந்து, எமது ஆய்வு அறிக்கைகளை பரிசோதித்து பார்த்தது.

ஆனால் அவ்வாறான எந்த தவறும் காணப்படவில்லை. என்றாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏதாவது மோசடிகள் மேற்கொள்வதை யாராவது கண்டால் அதுதொடர்பில் எமக்கு முறையிடலாம்.

ஆனால் அவ்வாறன எந்த முறைப்பாடும் எமக்கு கிடைக்கவில்லை. என்றாலும் தரம் தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாங்கள் 152 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் மாதிரியை பெற்றுக்கொண்டு, ஆய்வு செய்துபார்த்தோம். ஆனால் எந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் கலப்படம் செய்தமைக்கான தகவல் கிடைக்கவில்லை.

அத்துடன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குமான எரிபொருள் முத்துராஜவல மற்றும் கொலண்ணாவ களஞ்சிய நிலையங்களில் இருந்தே எரிபொருள் விநியோகிகப்படுகின்றது.

அதனால்  ஐ.ஓ.சி மற்றும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் ஒரே தரத்தை கொண்டதாகும். அதில் எந்த வித்தியாசமும் இல்லை என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்கப் பிரேரணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பு?

Next Post

அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கப்போகும் விசேட செய்தி

Next Post
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்கள் அபிமானத்தை பெற இது சிறந்த வாய்ப்பல்லவா?

அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கப்போகும் விசேட செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures