அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் அமைந்துள்ள களுத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் வீட்டில் இன்று (20) திருட்டுப் போயுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலுள்ள அறையொன்றின் யன்னல் வழியாக வீட்டுக்குள் சென்று திருடிய திருடன், அந்த யன்னல் வழியாகவே தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெறும் போது, வெல்கம எம்.பி. உட்பட வீட்டவர்கள் எவரும் வீட்டில் இருக்கவில்லையெனவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் அளுத்கம பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் உயிருக்கு ஆபத்துக்கள் ஏற்படுத்த வந்துள்ளாரா என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.