Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எமது சனநாயக ரீதியான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதிக்கு நன்றிகள்-வி.எஸ்.சிவகரன்.

October 2, 2017
in News, Politics
0
எமது சனநாயக ரீதியான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதிக்கு  நன்றிகள்-வி.எஸ்.சிவகரன்.

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்த்தில் அமைக்கப்பட்ட சட்டவிரோத புத்த விகாரை திறப்பதற்கு 29.09.2017 வருகை தர இருந்தீர்கள். அதற்கு எமது சனநாயக ரீதியான எதிர்ப்பை உங்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தோம்.
அதனை ஏற்றுக்கொண்டு விகாரை திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமையினையிட்டு மிகுந்த மன நிறைவடைவதுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
-இவ்விடையம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று(1) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
குறித்த விடையத்தில் நீங்கள் காட்டிய சனநாயகப் பெருந்தன்மைக்காக எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சனநாயகமும், இலங்கை அரசியல் அமைப்பும், மத விவகாரங்களும், இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் சமம் என்பதை நீங்கள் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் தங்களிற்கு உண்டு.
ஏனெனில் ஒரு சர்வாதிகார தலைமைத்துவத்தை எதிர்த்து சனநாயகரீதியில் தமிழ் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்காலத்திலும் பௌத்தர்கள் வசிக்காத இடத்தில் தற்போது வரை எவரும் இல்லாத சூழலில் விகாரையை தனியார் காணியில் அமைந்திருதுப்பது ஒருங்கிணைந்த சமூகமயமாக்கல் நல்லெண்ண செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாகவே காணப்படும்.
ஆகவே 29 ஆம் திகதி பௌத்த சாசன அமைச்சர் இந்த நிகழ்வில் கலந்த கொண்டது நல்லாட்சி சனநாயக விழுமியத்திற்கு உகந்த நாகரீகம் அல்ல.
மேட்டிமைவாத அடக்கி ஆளும் சிந்தனைத்துவம் கடந்த காலத்தில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தியது என்பது நாம் கற்றுக்கொண்ட பாடமாகும். எனவே எதிர்காலத்தில் இந்த சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகின்றோம்.
ஆகவே சனநாயக ரீதியில் நீதிகோரி போராடுவது தவறா? கடந்த ஏழுவருடங்களில் சனநாயக ரீதியான பல்வேறுவிதமான போராட்டங்களும், நீதி கோரிய நூற்றக்கணக்கான கடிதங்களும் பலருக்கு அனுப்பியுள்ளேன் ஆனால் உங்கள் புலனாய்வாளர்கள் தவறு என அவ்வப்போது நிரூபிக்க முனைகிறார்கள் என்பதே வேடிக்கையான வாடிக்கையாகி விட்டது
சனநாயக அடக்குமுறையின் விளைவே கடந்தகால போராட்டம் என்பதும் எமக்கு உணர்த்திய, கற்பிதம் அல்லவா? எனவே சனநாயக ரீதியான எனது போராட்டம் தொடரும் தங்கள் புலனாய்வு அமைப்புக்களின் எத்தகைய விசாரணைக்கும் தயாராகவே இருக்கின்றேன் என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத்தருவதுடன் இவ்வாறான சனநாயகச் செயற்பாட்டாளர்களை அடக்க முனைவது சனநாயகப் படுகொலையாகும்.
கடந்த ஆட்சிக்காலத்திலும் இவ்வாறான புலனாய்வு முகவரமைப்புக்களின் தவறான தகவல்களின் பிரகாரம் பல்வேறுவிதமான பின்னடைவுகள் நாட்டிற்கு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது எனவே இவற்றை தாங்கள் சீர்படுத்துவீர்கள் என நம்புவதுடன் தங்கள் பெருந்தன்மைக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரு பேட்டரியில் இயங்கும் விமானம்!

Next Post

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் புதிய வைத்தியசாலைகள்

Next Post

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் புதிய வைத்தியசாலைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

July 14, 2026
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

July 14, 2026
விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026

Recent News

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

யாழில் இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வது நிரூபணம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் பொய் அம்பலம்

July 14, 2026
மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

July 14, 2026
விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures