செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘என்ஜிகே’. இப்படம் தீபாவளிக்கு வரும் என்று சூர்யா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடையாததால் படத்தைத் தள்ளி வைத்தனர். சரி, பொங்கலுக்காவது படம் வெளிவந்துவிடும் என்று எதிர்பார்த்தால் படத்தின் சில காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் படமாக்கப்படாமல் உள்ளது என்கிறார்கள்.
இந்த மாத இறுதியில் சென்னையில் ஆரம்பமாகும் கடைசிகட்டப் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடைபெற உள்ளதாம். அது டிசம்பர் முதல் வாரம் வரை செல்வதால் படத்தை பொங்கலுக்கு வெளியிட வாய்ப்பே இல்லை என்பதே உண்மை. குடியரசு தினத்திற்கு வந்தாலே ஆச்சரியம் தான் என்கிறார்கள். பிப்ரவரி முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் தான் படம் வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
செல்வராகவன் திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடிக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். இதனால், அவருக்கும் சூர்யாவுக்கும் இடையில் கூட மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.