என் சார்ந்தும், எமது கட்சி சார்ந்து உத்தியோக பூர்வமில்லாது வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்து தகவல்களும் செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை என இழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள், அங்கு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கருமங்கள் தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ச்சியான கரிசணை கொண்டிருக்கின்றது.
இந்த நிலைமைகள் தொடர்பில் எமது அரசியல் உயர்பீடம் கடந்த முதலாம் திகதி அன்று கூடி எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து எள்ளளவும் மாறவில்லை என்பதை மீண்டும் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கின்றது.
என் சார்ந்தும், எமது கட்சி சார்ந்து உத்தியோக பூர்வமில்லாது வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்து தகவல்களும் செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எம்மை மையப்படுத்தி உறுதிப்படுத்தப்படாது வெளியிடப்படும் எந்த செய்திகளுக்கும், தகவல்களுக்கும் நாம் எந்தவகையிலும் பொறுப்பாளியாக முடியாது என்பதை இத்தருணத்தில் கூறுக்கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.