நாட்டிற்காக எந்தவித சவால்களையும் எந்த நேரத்திலும் ஏற்க தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சவால்களை வெற்றிகொண்டு பொறுப்புகளை சரியான முறையில் செய்வதை தான் இதற்கு முன்னரும் நாடு மக்களுக்கு நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இராணுவத்தினருக்கு சரியான மரியாதையை பெற்றுக்கொடுத்தது யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்னேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.