ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த ஈராக்கில், 200க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள, நினிவே, கிர்குக், சலாவுதீன் மற்றும் அன்பார் நகரங்களில் இந்த புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.