இலங்கை வாழ் மக்கள் வீட்டில் இருந்தபடி நீர் கட்டணத்தை செலுத்தும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
அனைத்து நீர் கட்டணங்களும் வீட்டிலிருந்து கடன் மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் செலுத்துவத்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நீர் அளவீடுகள் வழங்கப்படும் போது இந்த கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.
இதற்கு மேலதிகமாக நீர் துண்டிக்க வரும் அதிகாரிகளிடம் இருந்து, இந்த வசதிகளின் கீழ் கட்டணத்தை செலுத்தி நீர் துண்டிப்பை தடுக்க முடியும் என நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை குறிப்பிட்டுள்ளது.
கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கு குறுந்தகவல் மூலம் நீர் துண்டிப்பதற்கு முன்னர் இது தொடர்பில் அறிந்து கொள்ளவும் செலுத்தவுள்ள கட்டணம் தொடர்பிலும் அறிந்துக் கொள்ள முடியும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய நீர் இணைப்பு தொடர்புகளை பெற்றுக் கொள்வதற்கு செலுத்த கூடிய அனைத்து நீர் கட்டணத்தையும் எந்தவொரு வங்கியிலும் இலகுவாக செலுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.