Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை கிரிக்கெட் வீரர்களது ஒப்பந்த பிரச்சினைக்குத் தீர்வு

August 15, 2021
in News, Sports
0
ரபாடா வருகையால் தென் ஆப்ரிக்கா உற்சாகம்

இலங்கை கிரிக்கெட் வீரர்களது  ஒப்பந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

‘மே மாதத்திலிருந்து இழுபறி நிலையில் இருந்துவந்த கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தங்கள், மத்திய ஒப்பந்தம் என அழைக்கப்படாவிட்டாலும் வீரர்களுக்கு பலன் கிடைக்கக்கூடிய வகையிலான ஓர் ஒப்பந்தம் வழங்கப்படும்.

வீரர்களது நிலைமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளை நாங்கள் அறிவோம். எனினும் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்துக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் கசப்பானது.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பின்னர் ஒப்பந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைப்போம் என உறுதி வழங்கியும் அதற்கு அவர்கள் உடன்படாதது கவலை தருகின்றது’ என மோஹான்  டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.

‘வீரர்களது தேவைகளை நாங்கள் அறிவோம். எதுவாக இருந்தாலும் தங்களது ஆற்றல்களைக்கொண்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு வருவாயை  அவர்கள்தான் தேடிக்கொடுக்கின்றார்கள். அதனை எம்மால் மறுக்க முடியாது. எனவே அவர்களுக்கு அதி சிறந்த ஒப்பந்தங்களை வழங்க நாங்கள் முயற்சித்துவருகின்றோம்’ என்றார் அவர்.

தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைக் குழுவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் இந்த வருடம் வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தம் வழங்குவதில்லை என தீர்மானித்தன. இந் நிலையில் ஆற்றல் வெளிப்பாடுகள் அடிப்படையிலான ஒப்பந்தங்களின் வெளிப்படைத் தன்மை குறித்து வீரர்கள் கேள்வி எழுப்பியதால் இழுபறி நிலை ஆரம்பித்தது. எவ்வாறாயினும் மத்திய ஒப்பந்தத்துக்குப் பதிலாக கிரிக்கெட் சுற்றுப்பயண ஒப்பந்தத்திலேயே வீரர்கள் கைச்சாதிட்டனர்.

இந்த வருடத்துக்கு வீரர்களுடன் மத்திய ஒப்பந்தம் செய்யப்படமாட்டாது எனவும் ஜனவரி மாதத்தில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் குறிப்பிட்ட மொஹான் டி சில்வா, வீரர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளைப் போக்கும் வகையில் நியாயமான முறையில் அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என்றார்.

‘வீரர்களுக்கு பல்வேறு நிதி பிரச்சினைகள் இருக்கும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். லீஸ் எனும் தவணை அடிப்படையில் அவர்கள் கொள்வனவு செய்திருக்கக்கூடும். மானுடர்கள் என்ற வகையில் அவற்றை நாமும் அறிவோம். அவர்களுக்கு தொல்லை, கஷ்டங்கள் கொடுக்க விரும்பவில்லை. எனவே இனியும் தள்ளிப்போடாமால் ஒப்பந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பதில் உறுதியாக உள்ளோம். என்னதான் இருந்தாலும் அவர்கள் இலங்கை வீரர்கள். அவர்கள் தேசத்துக்காக விளையாடுபவர்கள். எனவே, அவர்களைக் கவனிக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

‘வீரர்களை சிறந்த நிலைக்கு கொண்டுவர எஸ்எல்சி பெருந்தொகை நிதியை முதலீடு செய்துள்ளது. வீரர்களின் நலன்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் நாங்கள் அறிவோம். அதேவேளை ஒழுக்கம், அர்ப்பணிப்புத்தன்மை, பொறுப்பு ஆகியவற்றை வீரர்கள் முறையாக கடைப்பிடிக்கவேண்டும்.

‘ எஸ்எல்சியின் நிருவாக சபைத் தேர்தலுக்கு முன்னர் நாங்கள் சிறிது காலம் ஒதுங்கியிருக்க நேரிட்டது. அது சரியான நேரமல்ல. அப்போது கிரிக்கெட்டை நிருவகித்தவர்கள் அணித் தலைமையை மாற்றினர். அவர்கள் புதிய ஒப்பந்தங்களுக்காக அவசரப்பட்டனர்.. இதன் மூலம் அவர்கள் எல்லாவற்றையும் குழப்பினார். அக் காலப்பகுதியில்தான் எல்லாம் நடைபெற்றது.

‘எவ்வாறாயினும் வீரர்களினின் நன்மை கருதி நியாயமான ஒப்பந்தங்களை விரைவில் வழங்குவோம்’ என மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

ஹெய்ட்டி நிவாரணப் பணிக்காக ஒசாகாவின் மகத்தான பங்களிப்பு

Next Post

ஹங்கேரி பஸ் விபத்தில் 8 பேர் பலி, மேலும் பலர் காயம்

Next Post
ஹங்கேரி பஸ் விபத்தில் 8 பேர் பலி, மேலும் பலர் காயம்

ஹங்கேரி பஸ் விபத்தில் 8 பேர் பலி, மேலும் பலர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures