Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையை பிரித்து விட்ட உலக நாடுகள்..! நெருங்கி விட்டது பேராபத்து..!!

December 17, 2016
in News
0
இலங்கையை பிரித்து விட்ட உலக நாடுகள்..! நெருங்கி விட்டது பேராபத்து..!!

இலங்கையை பிரித்து விட்ட உலக நாடுகள்..! நெருங்கி விட்டது பேராபத்து..!!

இப்போதைய ஆட்சி தொடர்ந்து செல்லுமானால் நாட்டிற்கு பேராபத்து ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ச நாட்டிற்கு வளங்களைச் சேர்த்தார், ஆனால் இப்போதைய ஆட்சி உள்ள வளங்களை வெளிநாடுகளுக்கு விற்று கொண்டு இருப்பதோடு அனைத்தையும் தனியார் மயப்படுத்தி வருகின்றது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்டு விட்டது. அதே போன்று யாழ், பலாலி, சம்பூர் போன்றவை இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டு விட்டது. இவ்வாறாக இலங்கையில் வளங்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றது.

மேலும் இப்போதைக்கு இராணுவமும் ஆட்சிக்கு எதிராக எழும் பொதுமக்களை அடக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அண்மைக்காலமாக இதனை பார்த்துக் கொண்டுதான் வருகின்றோம். ஒரு மிருகத்திற்கு சமமானோரே கடற்படைத் தளபதியாக இருக்கின்றார்.

இப்படியே தொடருமானால் , இதே ஆட்சி தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமானால் இலங்கையின் அனைத்து சொத்துகளும் வெளிநாடுகளுக்கு சென்று விடும். அதனை தவிர்க்க முடியாது. இது இலங்கைக்கு அதி பயங்கரமான ஆபத்தாகும்.

மேலும், இந்த ஆட்சி எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டு செல்லுமாயின் பொலிஸ் சேவை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள் தவிர ஏனைய அனைத்தும் தனியார் மயப்படுத்தப்பட்டு விடும் என்ற பயங்கர எச்சரிக்கையினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நந்தாமாலினி போன்றோரின் பழைய பாடல்களை உதாரணமாக கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தேசிய கீதத்தையும் மாற்றியமைத்து கொள்ளுங்கள்.

இதேவேளை இப்போது இந்த நாட்டிற்கு நாம் தெரிவிப்பது என்னவெனில், விடுதலைப்புலிகளிடம் முல்லைத்தீவையும் கிளிநொச்சியையும் கைப்பற்றியது போல இப்போது நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார அபாயத்தையும் அரசிடம் இருந்து மீட்கவேண்டும்.

எனவே அதற்காக அனைவருமாக ஒன்றிணைந்து முறைகேடான ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதி 2.5 பில்லியன் டொலர்கள் எனவும் அதனை 1.1 பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்ய போகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

விலைமனு கோராமலேயே சீன நிறுவனத்திற்கு துறைமுகம் வழங்கப்படுகிறது.

இது நல்லாட்சியின் அடிப்படை நிபந்தனைகளுக்கு எதிரானது.

துறைமுகம் மற்றும் விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு படையினரை ஈடுபடுத்த போவதாக பிரதமர் நேற்று கூறியுள்ளார்.

விமான நிலையம் மற்றும் துறைமுகத்தின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.

கொள்ளை விலைக்கு விற்பனை செய்யும் போது ஏற்படும் எதிர்ப்பை அடக்கவே படையினரை அவற்றின் பாதுகாப்புக்கு பயன்படுத்த போகின்றனர்.

இதனடிப்படையில் நாட்டின் தற்போதைய தேசிய கீதத்திற்கு பதிலாக நந்தா மாலினியின் ரட்ட கரவன்ன நம் என்ற பாடசாலை தேசிய கீதமாக பயன்படுத்த முடியும்.

இலங்கை மத்திய வங்கியும் திறைசேரியும் மீட்கப்படாத பிரதேசங்களாக இருக்கின்றன. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டளஸ் அழகப் பெரும குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

கோஹ்லி செய்த மிகப் பெரிய தவறு: கைமேல் பலனடைந்த இங்கிலாந்து அணி!

Next Post

முல்லைத்தீவில் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர்! – அச்சத்தின் மத்தியில் பெண்கள்

Next Post

முல்லைத்தீவில் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர்! - அச்சத்தின் மத்தியில் பெண்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures