Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையை அச்சுறுத்தியே இரசாயன உரத்தை சீனா அனுப்பியுள்ளது | ரஞ்சித் மத்தும பண்டார

October 22, 2021
in News, Sri Lanka News
0
நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைப்பதாயின் அரசாங்கம் எதற்கு?

எந்தவித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படாது வெவ்வேறு நாடுகளின் இரசாயன உரங்களை இலங்கையில் பயன்படுத்தி இலங்கையை ஒரு ஆய்வுகூடமாக பயன்படுத்தவே நினைக்கின்றனர் என எதிர்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார சபையில் தெரிவித்தார்.

நாட்டின் மண்ணுக்கு மட்டுமல்ல மக்களின் உடலுக்கும் ஏற்பில்லாத உரத்தை சீனா அனுப்பியுள்ள நிலையில், அதனையே மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சீனா இலங்கையை அச்சுறுத்தி இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் சபையில் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21 ), எதிர்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நாட்டின் உர பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டுவந்து உரையாற்றும் போதே  இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளில் இருந்து உரம் இறக்குமதி செய்யும் வேளையில் அதன் தரம் குறித்து கூடிய ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

எமது மண்ணுக்கு உகந்ததா என்பதை ஆராய வேண்டும். குப்பைகூளங்களை இறக்குமதி செய்து நாட்டின் வளங்களை நாசமாக்கக்கூடாது. இன்றைய நிலையில் நாட்டில் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் விவசாய பிரச்சினைகளை தீர்க்காது வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்துள்ளனர். உரம் பிரச்சினைக்கு சீனாவிடம் இருந்து உரம் இறக்குமதி செய்ய தீர்மானித்தனர்,

ஆனால் சீனாவின் உரம் தரம் குறைந்தது எனவும், மனித உடலுக்கு பாதகமான தன்மைகள் உள்ளதாக சர்வதேச ஆய்வுகள் கூட தெரிவித்தனர்.

இதனை அடுத்து உரக் கப்பலை திருப்பி அனுப்பினர். ஆனால் சீனா இதே உரத்தை மீண்டும் அனுப்புவதாக தெரிய வந்துள்ளது. சீனா எச்சரித்து எமக்கு இந்த உரத்தை அனுப்புகின்றது.

அதேபோல் லித்துவேனியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் இங்கு பரிசோதிக்கப்பட்டதா? இல்லவே இல்ல. எந்தவித பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படாது இவ்வாறு உரம் பாவனைக்கு வழங்கப்படுகின்றது.

சீனாவில் இருந்து உரம் இறக்குமதி செய்ய முடியாது போனதை அடுத்து இந்தியாவில் இருந்து நனோ நைற்றிஜன் இறக்குமதி செய்துள்ளனர். இதுவும் இரசாயன உரம் என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது பிரதான உரம் அல்ல, உப உரமாகவே இதனை பயன்படுத்த முடியும். ஆகவே மக்களை, விவசாயிகளை ஏமாற்றும் வேலையையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்தியாவில் கூட இந்த உரம் பரிசோதிக்கப்படவில்லை,11ஆயிரம் விவசாயிகளிடமே இது பரிசோதிக்கப்பட்டு பரிசோதனை மட்டத்தில் உள்ள ஒன்றாகும், ஆகவே இலங்கையை பரிசோதனை கூடமாக பயன்படுத்தி உரங்களை பரிசோதனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த உரங்களை ஆய்வுகள் இன்றி பயன்படுத்துவதனால் எமது வளங்களுக்கு ஏற்படும் அழிவுகள் கண்டறியப்படாது. அதுமட்டுமல்ல இந்தியாவின் விலைக்கு இங்கு கணக்கிட்டு பார்த்தால் 1292 ரூபாவே செலவாகும். ஆனால் இரண்டாயிரத்து ஐநூறுக்கு அதிகமான விலையில் இதனை விற்கவுள்ளனர். விவசாயிகளின் வயிற்றில் இவ்வாறு அடித்து ஊழல் செய்ய வேண்டாம்.

விவசாய நிலங்களை நாசமாக்கிய அரசாங்கமாக இந்த அரசாங்கம் வரலாற்றில் பதியும். நாட்டில் தேயிலை தோட்டங்கள் நாசமாகிவிட்டது, அடுத்ததாக விவசாய நிலங்களை நாசமாக்க ஆரம்பித்துள்ளனர். செய்ய முடியாத வேலைகளை செய்ய முயற்சித்து விவசாயிகளை கஷ்டத்தில் தள்ள வேண்டாம். வியாபாரிகளின் கதைகளை கேட்டு நாட்டை நாசமாக்க வேண்டாம். அரசாங்கம் வியாபாரிகளின் பின்னால் இருந்துகொண்டு விவசாயிகளை அழிக்கும் வேலையை முன்னெடுத்து வருகின்றது என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஓமானை தோற்கடித்து சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது ஸ்கொட்லாந்து

Next Post

கடாபியின் நிலைமை கோட்டாவுக்கும் வரும் என்கிறாரா விமல்?

Next Post
ஹுசைன் ஒரு இராஜதந்திர விபச்சாரி – விமல்

கடாபியின் நிலைமை கோட்டாவுக்கும் வரும் என்கிறாரா விமல்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures