எனது அரசாங்கத்தில் சங்கிரிலாவுக்கு 6 ஏக்கர் நிலத்தை விற்றேன். அதற்கு முன் கொழும்பு சிட்டி புரொஜெக்ட் என்ற பெயரில் கடல் பொதுவாக மண் அரிப்பைத்தானே செய்யும்.
எனவே கடலின் மண்ணை எடுத்து 500 முதல் 600 ஏக்கர் நிலமொன்றை உருவாக்கி நாட்டோடு இணைத்துக் கொண்டோம். அதில் எல்லாவற்றையும் நான் சீனாவுக்கு கொடுக்கவில்லை.
25 ஹெக்டயார் மட்டும்தான் சீனாவுக்கு உரிமையாக்கிக் கொள்ளக் கொடுத்தோம். அதில் 500 ஹெக்டயார் எமக்கு கிடைத்தது.
அதற்கு பிறகுதான் சர்வதேச நம்பிக்கையை பெற வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு அழைப்பு விடுத்து உலகின் 100க் கணக்கான ஹோட்டல் உள்ள நிறுவனம்தான் சீனாவின் சங்கிரிலா நிறுவனத்துக்கு ஒரு காணியை கொடுத்தேன்.
அவர்களுக்கு காலிமுகத் திடலில் உள்ள 6 ஏக்கர் நிலத்தை கொடுத்தோம் விற்றோம்.